![ஜூன் 15- ஆம் தேதி தொடங்குகிறது போடிநாயக்கனூர்- சென்னை ரயில் சேவை!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/Train-1624859786-1.jpg)
ஓணம் பண்டிகையையொட்டி, தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!
வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 05.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.00 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வரும் வரும் ஆகஸ்ட் 27- ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, ஆகஸ்ட் 28- ஆம் தேதி பிற்பகல் 02.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனவும், இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 18) காலை 08.00 மணிக்கு தொடங்கும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.