கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு
மணிப்பூரில் கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து அத்து மீறியதால்
கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஆளும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பழங்குடியின பட்டியலில் சேர்த்தல் தொடர்பாக வெடித்த மோதல் அம்மாநிலத்தையே கலவர பூமியாக மாற்றி உள்ளது.
குளர் நிறைந்த மணிப்பூர் மாநிலம் கடந்த மூன்று நாட்களில் எரியும் கந்தக பூமி போல மாறி உள்ளது. மொத்தமிருக்கும் 16 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் பற்றி எரிகின்றன.
எங்கு திரும்பினாலும் தெருக்கல் தோறும் வாகனங்கள் தீவைப்பு, பெரிய பெரிய வீடுகள், அலுவலகங்கள் சூறையாடல், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது, கலவரக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவையே பார்க்க முடிகிறது.
மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மைத்தி சமூகத்தினர் 53 சதவீதம் உள்ளனர். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநில அரசருக்கு மாநில உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையே இந்த கலவரத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.
பழங்குடியினரான நாகா, கொக்கி உள்ளிட்ட அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்டத்தை கடந்த புதன்கிழமை அறிவித்தது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. வன்முறையாளர்களை கண்டதும் சுட மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். மூன்று நாட்களாக படரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை ஓரங்களில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.
மறுபுறத்தில் தலைநகரம் இம்பால், சுரக்சன்பூரில் நிலமை கட்டுக்குள் வந்திருப்பதாக நேற்று நள்ளிரவு ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாகலாந்தில் இருந்து கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே தன்னுடைய மாநிலம் பற்றி எரிவதாகவும் உதவி செய்ய வாருங்கள் என்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் டிவிட்டரில் அவைய குரல் எழுப்பி உள்ளார்.