spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

“பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

-

- Advertisement -

 

"பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
Photo: ANI

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

we-r-hiring

திருப்பதி மலைப்பாதை.. சிறுத்தை சிறுவனை தாக்கியது..

அப்போது பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மத்திய அரசிடம் எல்லாவற்றுக்குமே போராட வேண்டியுள்ளது. எந்த விவகாரத்திலும் மாநில அரசுகளை மத்திய அரசுக் கலந்தாலோசிப்பதில்லை. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்; ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திப்போம். வரலாற்றை மாற்ற நினைக்கும் பா.ஜ.க.விடம் இருந்து வரலாறு காப்பாற்றப்பட வேண்டும். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. முகமைகளை பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும். பாட்னா நடந்த கூட்டத்தில் புதிய வரலாறு தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு”- முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி!

அதைத் தொடர்ந்து, பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் கட்டமைப்பை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிதைக்கிறது. வேறுபாடுகள் இருந்தாலும், கருத்தியலுக்காக ஒன்றாக இணைத்துள்ளோம்” என்றார்.

MUST READ