spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்'- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு...

‘பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்’- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்சனை உண்டாகும்?

தேர்தல் பொதுக்கூட்டங்களில் குண்டுவெடிப்புத் தாக்கல் அரங்கேற்றப்படவுள்ளதாக தகவல்களைத் தொடர்ந்து, இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2002- ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள், பேரணிகள் நடைபெறும் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை கவனமாகத் திட்டமிட வேண்டும் எனவும், அந்த தகவல்கள் வெளியே கசியாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!

நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ