அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று அன்னாசி பழம். இதில் உள்ள மருத்துவ குணங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.
இன்றுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் கூட சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதனை குணமாக அறுவை சிகிச்சை என்ற ஒரு வழி இருந்தாலும் இதனால் உடல் மிகவும் சோர்வடைந்து விடுகிறது. எனவே சிறுநீரக கற்களை கரைக்க அன்னாசி பழம் அருமருந்தாக பயன்படுகிறது. அதாவது அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் அன்னாசி பலத்தை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல், இதய கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமடையும். அதேசமயம் அன்னாசிப்பழம் உடலை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.அன்னாசி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் விரைவில் கரைந்து விடும். அன்னாசி பழத்தின் சாற்றில் ப்ரோமலைன் என்ற நொதி உள்ளது. இது சிறுநீரக கற்களை உடைக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.