- Advertisement -
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளாா். மேலும் இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆயலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாக்கிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடியடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்பின், பிரதமருடன் முப்படை தளபதி அனில் சவுகான் ஆலோசனை நடத்தவுள்ளாா். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது பற்றி முக்கிய முடிவு விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.