
நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கிய லேண்டரியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்தது பிரக்யான் ரோவர். நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து தனது ஆய்வை மேற்கொள்ளும்.

வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!
26 கிலோ எடைக்கொண்ட பிரக்யான் ரோவர் நிலவில் ஏழு வகையான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. ரோவரில் இணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சென்சார் அமைப்பு, ஆண்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு’- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?
நிலவின் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரோவர் மேற்கொள்ளவுள்ள அறிவியல் ஆய்வுகளை பகுப்பாய்வுச் செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.