spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PMO

ரூபாய் 940 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 07.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் தொடங்கியது.

we-r-hiring

கர்நாடக அமைச்சரவை- அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

பூஜைக்கு பிறகு தமிழக ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை நிறுவினார். பின்னர் செங்கோலுக்கு மலர் தூவினார். அதைத் தொடர்ந்து, குத்து விளக்கேற்றிய பிரதமர், ஆதீனங்களிடம் ஆசிப் பெற்றார்.

திருவாவடுதுறை, தருமபுர, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடி ஆசிப் பெற்றார். அதைத் தொடர்ந்து, வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

நாடாளுமன்றத் திறப்பையொட்டி, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற அனைத்து மத பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

அருள்நிதி படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!

பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நான்கு தளங்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

MUST READ