Homeசெய்திகள்இந்தியாசோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி

சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி

-

- Advertisement -

மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சோம்நாத் சூர்யவன்ஷி தலித் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்திமகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக  போராடிய, சோம்நாத் சூர்யவன்ஷியை போலீசார் கைது செய்தனர் . அவர் அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்ததாக கூறி கைது செய்து, கொலை செய்ததாக  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சோம்நாத் சூர்யவன்ஷி குடும்பத்தினரை சந்தித்த பின்னர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் சூர்யவன்ஷியின் குடும்ப உறுப்பினர்கள் காட்டியதாக கூறினார். மராத்வாடா பகுதியில் அமைந்துள்ள நகரின் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு அருகே டிசம்பர் 10 ஆம் தேதி மாலை அரசியலமைப்பின் கண்ணாடியால் மூடப்பட்டிருந்த பிரதியை சேதப்படுத்திய பின்னர் பர்ப்பாணியம் நகரம் வன்முறை பகுதியாக மாறியது.

சோம்நாத் சூர்யவன்ஷி தலித் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்திவன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களில் பர்பாணியில் உள்ள ஷங்கர் நகரைச் சேர்ந்த சூர்யவன்ஷி (35) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் டிசம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் இருந்தபோது நெஞ்சுவலி மற்றும் அசௌகரியம் என்று புகார் செய்த பின்னர் அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டு, அப்போது அரசு மருத்துவமனையில் இறந்தார்.

பர்ப்பாணிய வன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் மாநிலங்களவையில் ஃபட்னாவிஸ் கூறுகையில், சூர்யவன்ஷி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும்,  மிருகத்தனமாக நடந்ததற்கான எந்த ஆதாரமும் சிசிடிவி காட்சிகளில் இல்லை என்றும் மாஜிஸ்திரேட்டிடம் சூர்யவன்ஷி கூறியதாக கூறினார்.

சூர்யவன்ஷியின் குடும்பத்தினரை சந்தித்த பிறகு ராகுல் காந்தி, ”சட்டசபையில், போலீசுக்கு தகவல் கொடுக்க, முதல்வர் பொய் சொன்னார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அரசியல் சாசனத்தை துடைத்தழிப்பதாகும்” என்று காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், அந்த இளைஞரை கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கோரினார். இது அரசியல் இல்லை, கொலை நடந்துள்ளது, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். பர்ப்பாணிய சம்பவத்திற்கு யார் காரணம் என்று கேட்டதற்கு, இதற்கு சித்தாந்தமே காரணம் என்றும், முதல்வர் பேசியதால் அவரும் பொறுப்பு என்றும் ராகுல் காந்தி கூறினார்.

 

MUST READ