முஸ்லீம்களுக்கு எதிரான பாஜக திட்டம்- 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து என்ற உத்தரவை மே 9ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அம்மாநில அரசு கடந்த மாா்ச் 24ம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த 4% இடஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெறலாம் எனவும் அரசு அறிவித்தது. மே 10ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை விமா்சனங்களுக்கு வழிவகுத்தது.
இதனை அடுத்து கர்நாடக அரசின் அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.