Homeசெய்திகள்இந்தியாசிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்

சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்

-

சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்

உத்தரபிரதேசத்தில் போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது.

ஆக்ராவில் போலீஸ் அதிகாரி

ஆக்ராவை அடுத்த பர்ஹான் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார், குடிபோதையில் தீஹேயா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த வீட்டில் வசித்த சிறுமியின் ஆடையை கிழித்த அவர், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தின்னர் வந்து சிறுமியை மீட்டனர்.

இந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள், போலீஸ்காரரை கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலான நிலையில், ஆக்ரா போலீஸ் கமிஷனர் உடனடியாக அந்த போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து அவர் மீது துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ளார். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார், மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்த சந்தீப் குமார், விசாரணையின்போது தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

MUST READ