- Advertisement -
மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வெட்ட இருந்த மரத்தில் இருந்து பீய்ச்சி அடித்த தண்ணீரை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அர்த்தவீடு மண்டலம் போடுராஜுதுரு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் மரத்தை வெட்ட முயன்றனர்.
மரத்தை வெட்டியபோது மரத்தில் இருந்து பீய்ச்சி அடித்து கொண்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் மரம் வெட்டுவோர், அதுபற்றி கிராம மக்களிடம் தெரிவித்தனர். உடனே அந்த மரத்தை பார்க்க மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
குறிப்பாக அந்த மரத்தில் இருந்து வரும் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.