Homeசெய்திகள்இந்தியாஉள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

-

 

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!
Photo: ANI

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!

வாக்குப்பதிவு மையங்கள் சூறை, வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைப்பு என மிகப்பெரிய அளவிலான வன்முறைகளுக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் 74,000 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை, 22 மாவட்டங்களில் உள்ள 229 மையங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜூலை 11) இரவு 10.30 மணி நிலவரப்படி, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 28,985 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், 1,540 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பா.ஜ.க. 7,764 இடங்களில் வெற்றி பெற்று 417 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,409 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2,022 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக மேற்குவங்க மாநிலத்தின் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ