கண் இமை முடி வளர்ச்சிக்கு இதை செய்யுங்கள்!
1. வைட்டமின் இ கேப்ஸ்யூல்களை எடுத்து அதிலிருந்து ஜெல் வடிவ மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு நேரத்தில் சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு அளவு கண் இமை முடி மீது தேய்த்து வர கண்ணிமை முடியின் வளர்ச்சி இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

2. எலுமிச்சை பழத்தின் தோல்களை சீவி, அதனை விளக்கெண்ணெயில்யின் போட்டு ஏழு நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த இந்த எண்ணெயை கண் இமை முடிகளில் தினம் தடவி வர முடி நன்கு வளரும்.
3. கண்களை மூடி இமைகளின் மேல் மென்மையான அழுத்தம் தர கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இதனால் இமை முடிகளின் வளர்ச்சி அதிகமாகும்.
4. இரவு தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது சிறிய பிரஷினை வைத்து கற்றாலையில் இருந்து எடுக்கப்பட்ட ஜெல்லை தடவ வேண்டும். கற்றாழையில் இருக்கும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை கண் இமை முடிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன் முடிக்கு வலிமையையும் சேர்க்கிறது.
5. ஒரு ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை சிறிய பஞ்சில் தொட்டு கண் இமை முடிகளில் தடவி வர முடிகள் மென்மையாகவும் வேகமாகவும் வளரும்.
இந்த முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம் . நல்ல பலன் கிடைக்கும்.