நம் அன்றாட உணவுகளில் உளுந்து வகையை எடுத்துக் கொள்வதினால் நம் உடல் வலிமை பெறும். அது மட்டும் இல்லாமல் வயதுக்கு வரும் பெண்களுக்கு இந்த உளுந்து ஆரோக்கியமானதாக விளங்குகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால் கை, கால் சோர்வு, மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
தற்போது உளுந்தில் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். உளுந்து லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 2 கப்
அரிசி – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 2 கப்
நெய் – தேவையான அளவு
செய்முறை:
உளுந்து லட்டு செய்வதற்கு முதலில் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின் வானலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இரண்டையுமே ஆற வைத்து தனித்தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் நெய் சேர்த்து, நெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவினை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும்.
மிதமான தீயில் வைத்து நன்கு கிளறியதும், வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி சூடாக இருக்கும் சமயத்திலேயே லட்டுகளாக உருட்டி கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நெய்யில் வருத்த முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.இப்போது ஆரோக்கியமான உளுந்து லட்டு தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். உளுந்து லட்டினை கருப்பு உளுந்தில் செய்வது நல்லது.