spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அழிஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

அழிஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

-

- Advertisement -

அழிஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!அழிஞ்சில் மூலிகையானது எல்லா வகையான நிலங்களிலும் வளரும் சிறு செடி வகையாகும். இவற்றின் விதை, இலை, வேர்ப்பட்டை முதலியன மருத்துவ பயன்கள் கொண்டவை. இந்த அழிஞ்சில் மரத்தில் சிவப்பு, வெள்ளை, கருப்பு என வெவ்வேறு நிறங்களில் பூக்கள் உடைய மரங்களும் உண்டு.

இந்த அழிஞ்சில் மரத்தில் காய்ச்சலை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த அழிஞ்சில் செய்யப்படும் மருந்துகள் ஒரு வாரத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதால் வாந்தி, பேதி போன்றவை உண்டாகும். எனவே இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

we-r-hiring

அழிஞ்சில் வேர்ப்பட்டையை காய வைத்து பொடி செய்து, அதில் 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை என இருவேளை எடுத்துக் கொண்டால் பாம்பு, வெறி நாய், எலி போன்ற விஷக்கடிகள் குணமாகும்.

அதேசமயம் தொழுநோய், புண் போன்றவைகளும் சரியாகும்.அழிஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

அழிஞ்சில் இலையை அரைத்து ஒரு கிராம் அளவில் காலை, மாலை என இரு வேலைகளில் எடுத்துக் கொண்டால் கப நோய்கள் குணமடையும்.

அழிஞ்சில் விதையின் மூலம் எடுக்கப்படும் எண்ணையை உடலில் தேய்த்து வருவதனால் தோல் நோய்கள் தீரும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

MUST READ