மஸ்ரூம் பிரியாணி செய்முறை:
மஸ்ரூம் பிரியாணி செய்ய முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு பிரியாணி இலை, ஒரு அண்ணாச்சி பூ, அரை ஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காய், இரண்டு பட்டை, மூன்று கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின்னர் மூன்று பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதனையும் குக்கரல் சேர்த்து வதக்க வேண்டும்.
அதேசமயம் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் அளவு இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னரில் நறுக்கி வைத்துள்ள இரண்டு தக்காளியை சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கி விட வேண்டும். அதேசமயம் இரண்டு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்போது கரம் மசாலா, மிளகாய் பவுடர், மஞ்சள் பவுடர், பிரியாணி பவுடர் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். மசாலா நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அரைக்கப் அளவு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மஸ்ரூம்களை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு கப் பாஸ்மதி அரிசி சேர்த்து, அத்துடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு மூடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
இப்போது ருசியான மஸ்ரூம் பிரியாணி தயார். வெங்காயம் கலந்த தயிர் ரைத்தவுடன் பரிமாறலாம்.