spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை!

கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை!

-

- Advertisement -

கண் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. முன்புள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டதனால் அவர்கள் நூறு ஆண்டுக்கு மேலாக வாழ்ந்து வந்தனர்.கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை! அப்போது அவர்களுக்கு கண்கள், பற்கள், கை, கால்கள் என அனைத்துமே ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்றுள்ள காலத்தில் 40 வயதை கடந்தாலே உடம்பில் என்னென்ன பிரச்சனை வரப்போகிறதோ? என்ற பயம் வந்துவிடுகிறது. அதிலும் சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு அதனால் கண்கள் பாதிப்படைகின்றன. எனவே சரியான உணவு முறையை பின்பற்றுவதனால் இது போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். அதன்படி தற்போது கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை பற்றி பார்க்கலாம்.

  1. 40 வயதை கடந்த பின்னர் அனைவருமே வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் மாதத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது நல்லது.கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை!

2. அடுத்தது சாப்பிடும் சமயத்தில் டிவி, மொபைல் போன்ற எந்த செயற்கை திரைகளையும் பார்க்காமல் சாப்பாட்டின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். குறிப்பாக தூக்கத்தின் போது கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். எனவே எட்டு மணி நேரம் தூக்கம் என்பது அவசியம். தூங்க இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் இரவு நன்கு தூங்க வேண்டும் என்றால் அடர்நிற அறையில் தூங்குவது சிறப்பானது.கண் ஆரோக்கியத்திற்காக நாம் செய்ய வேண்டியவை!

we-r-hiring

3. மேலும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் பார்வை மங்குவது போன்று தெரிந்தால் எதையும் கூர்மையாக பார்க்க கூடாது. எடுத்துக்காட்டாக புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருப்பின் புத்தகம் படித்தலை தவிர்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பின்பற்றியதோடு ஆரோக்கியமான உணவுகளையும் பின்பற்றுவது நல்லது.

MUST READ