spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் -...

உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் – ரவிக்குமார் எம்.பி

-

- Advertisement -

உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்ச்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து வருவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது- –

ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் 31962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 7268 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி 28152 கோடிதான். அதைவிட உத்தரப்பிரதேசம் என்ற ஒரு மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகமாகும்.

அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறேன்.இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்

 

MUST READ