spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது - உதயநிதி

அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது – உதயநிதி

-

- Advertisement -

அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது, அவர்களுடைய கால்களாவது சுத்தமாகட்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

ஆந்திரா மாநிலம் துணை முதல்வர் பவன் கல்யாண் பதவிக்கு வந்தவுடன் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழும்பு கலப்படம் செய்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விரதம் இருந்து பாவங்களை கழிப்பதாகவும், அதற்கு திருப்பதிக்கு நடந்து செல்வதாகவும் நாடகம் நடத்தினார். அவருடைய அரசியலுக்கு திருப்பதி லட்டு கைக்கொடுக்கவில்லை.

திருப்பதி லட்டு மேட்டரில் ஆந்திரா அரசு மீதும், சந்திரபாபு, பவன் கல்யாண் கூட்டணியை உச்சநீதிமன்றம் கண்டித்தது. திருப்பதி லட்டு என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, அதில் விளையாட வேண்டாம் என்று கொட்டு வைத்து அனுப்பியது.

உடனே யூ டன் எடுத்த பவன் கல்யாண், தமிழக துணை முதல்வர் உதயநிதி, சாதனம் குறித்து எப்பவோ பேசியதை தற்போது பேசத் தொடங்கியுள்ளார். மேலும் திருப்பதி கோயிலில் அவருடைய புகைப்படத்தை காலில் போட்டு மிதிப்பதை படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தைப் பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!

MUST READ