Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கில் திமுக அபார வெற்றி: வீராப்பு காட்டிய நாதக டெபாசிட் காலி..!

ஈரோடு கிழக்கில் திமுக அபார வெற்றி: வீராப்பு காட்டிய நாதக டெபாசிட் காலி..!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார்- 114439 வாக்குகளை பெற்றார்.. நாதக வேட்டபாளர் சீதாலெட்சுமி 23810 வாக்குகளைப் பெற்றார். திமுக 90629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட தேர்தலில் போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, தவிர நாடாளும் மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், 33 சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.தேர்தலில் பதிவான வாக்குகள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. நேரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23810 வாக்குகளை பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட அதிகம்.இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, ஏறக்குறைய நாம் தமிழர் வெற்றியை தழுவியுள்ளது என கூறியுள்ளார்.

சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு..

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்த தேர்தலை பொருத்தவரை நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவே கிடையாது. திமுக பயந்துவிட்டது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிறது. மக்களிடம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வெற்றி அளித்திருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களை சிந்திக்க வைத்ததே நாம் தமிழர் சீமானின் வெற்றி தான். எங்கள் வாக்கு சதவீதம் கடந்த முறையை விட இந்த முறை உயர்ந்து இருக்கிறது. இதனால் திமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பெரியாரை சீமான் விமர்சித்ததால் நாங்கள் தோற்கவில்லை. அதே சமயத்தில் எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பண பலத்தை தாண்டி எங்களுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது.

MUST READ