Homeசெய்திகள்அரசியல்ஏக்நாத் ஷிண்டேவின் 3 நிபந்தனைகள்: பாஜகவுக்கு சிக்கல்

ஏக்நாத் ஷிண்டேவின் 3 நிபந்தனைகள்: பாஜகவுக்கு சிக்கல்

-

- Advertisement -

டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு பிறகும் மகாராஷ்டிர முதல்வர் யார் என்பது குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுடனான சந்திப்புக்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே நேர்மறையான விஷயங்களைக் கூறினார். அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மும்பையில் ஓரிரு நாளில் மகாயுதி கூட்டணிக் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு மும்பைக்கு வந்த ஷிண்டே வெள்ளிக்கிழமை மதியம் திடீரென சதாராவில் உள்ள தனது கிராமத்திற்குச் சென்றார். பாஜகவின் அணுகுமுறையால் ஷிண்டே வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவின் தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் பாஜக ஒன்றையாவது ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் வியாழன் இரவு அமித் ஷாவை சந்தித்து 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் மகாயுதி 230 இடங்களை வென்ற பிறகு அதிகாரப் பகிர்வு குறித்து விவாதித்துள்ளனர். இந்த சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.

சட்டசபை தேர்தல் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்ததால், பெண் வாக்காளர்கள், மராட்டியர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மகாயுதிக்கு வாக்களித்தனர். லட்லி பெஹன் யோஜனா, இடஒதுக்கீடு முடிவு மற்றும் பல்வேறு சமூகங்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு வாரியங்களின் காரணமாக மகாயுதியின் வெற்றியையும் அவர் குறிப்பிட்டார்.

ஷிண்டே தான் ஏன் முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறினார். சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘மஹாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்ததாக கூறிய ஷிண்டே, தன்னை முதல்வராக்காவிட்டால், மராட்டிய சமூகத்தின் மக்கள் வருத்தம் கொள்வார்கள். முதலமைச்சராக மக்களின் முக்கிய தேர்வாக இருந்த சில சர்வேகளையும் காட்டினார். தங்கள் கட்சி 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால் அநியாயம் என்றும் பாஜக தலைமை கூறியுள்ளது.

இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே, தன்னை முதல்வராக்காவிட்டால், உள்துறை, நிதி, வருவாய் துறைகளை தனக்கு வழங்க வேண்டும் என மற்றொரு நிபந்தனையை விதித்தார். அவருக்கு இந்த இலாகாக்களை அளித்து, ஃபட்னாவிஸை முதல்வராக்கினால், மாநிலத்தில் அதிகார சமநிலை நிலைநாட்டப்படும் என்றார். இதன்பிறகு யாரை துணை முதல்வர் ஆக்குவது என்பதை முடிவு செய்வோம் என்றார்.மகாயுதி கூட்டணியில் சலசலப்பு..! தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் எதுவும் போடலையே - ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி..

சிவசேனாவுக்கு இந்த மூன்று துறைகளும் வழங்கப்படாவிட்டால், தனது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என்றும் ஷிண்டே கூறினார். “மாநிலத்தில் சிவசேனா வெளியிலிருந்து ஆதரவை வழங்கும் என்றும், கட்சியின் ஏழு மக்களவை எம்.பி.க்களும் நரேந்திர மோடி அரசுக்கு வெளியில் இருந்து பரந்த இந்துத்துவாவை ஆதரிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அதிகாரப் பகிர்வு சூத்திரம் குறித்து விவாதிக்க ஷிண்டே, ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மும்பையில் வெள்ளிக்கிழமை சந்திக்க இருந்தனர், ஆனால் ஷிண்டே சந்திப்பைத் தவிர்த்துவிட்டு சதாராவில் உள்ள தனது கிராமத்திற்குச் சென்றார். மாநிலத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும் போதெல்லாம், அவர் தனது கிராமத்திற்கு செல்வது வழக்கம்.

அமைச்சர் பதவிகளை விடுக்கொடுக்காததால் ஷிண்டே கடும் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் அவர் கிராமத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ பாரத் கோகவலே, எங்கள் அரசில் ஃபட்னாவிஸ் துணை முதல்வராக இருந்ததாகவும், அவர் உள்துறை முமைச்சராகவும் இருந்தார். அப்படியானால் ஷிண்டே துணை முதல்வராக இருக்கும் போது ஏன் உள்துறை இருக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ