திமுக கூட்டணியுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் 6 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்பதாகவும் அதிலும் இரட்டை இலக்க தொகுதியில் உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.
கடந்த 27-ம் தேதி திமுகவுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நிலையில், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் இரட்டை இலக்கு தொகுதியை கேட்க உறுதியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளாா்.
உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது – டாக்டர் சோமசேகரா



