spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

-

- Advertisement -

ஈ.வி.கே.எஸின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் மான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.

we-r-hiring

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா(46). தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை முதல் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இறந்தார். இவருக்கு வயது 46. (28.2.1976)

இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இறந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா, பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார்.

இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமனா ஈவெரா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். 2006 – 2010 ஆம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், 2014-2017 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இருந்தார். தற்பொது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார்.

எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா இறந்த தகவல் காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ