Homeசெய்திகள்அரசியல்மதுபானம்… அதிகாரப்போதை… அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்த அன்ன ஹசாரே வருத்தம்..!

மதுபானம்… அதிகாரப்போதை… அரவிந்த் கெஜ்ரிவாலை எச்சரித்த அன்ன ஹசாரே வருத்தம்..!

-

- Advertisement -

முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விமர்சனத்தைத் தொடங்கியுள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது அரவிந்த் கெஜ்ரிவால் “பணம் மற்றும் அதிகாரத்தை” நுகர்ந்தது தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

26 ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்த பாஜக, டெல்லியில் ஆட்சியை கைப்பற்றத் தயாராக உள்ளது. பாஜகவின் பர்வேஷ் வர்மாவால் தனது புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலே தோற்கடிக்கப்பட்டார். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு வழிவகுத்த 2011 ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முகமான அன்னஹசாரே, கெஜ்ரிவாலுக்கு அளித்த எச்சரிக்கைகள் கவனிக்கப்படவில்லை.

“ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கை குற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். இந்த குணங்கள் வாக்காளர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க உதவுகின்றன. நான் இதை (அரவிந்த் கெஜ்ரிவாலிடம்) சொன்னேன். ஆனால் அவர் கவனம் செலுத்தவில்லை. இறுதியாக, அவர் மதுவில் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுந்தது? அவர் பணபலத்தால் மூழ்கடிக்கப்பட்டார்” என்று கெஜ்ரிவால் குறித்து அன்ன ஹசாரே எச்சரித்து இருந்தார்.

டெல்லி அரசின் 2021-22 மதுபானக் கொள்கை தனியார் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்தக் கொள்கை மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டியதாக அமலாக்க இயக்குநரகம் கூறியது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்

ஹசாரே நீண்ட காலமாக கலால் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 2022 ஆம் ஆண்டில், அவர் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் “நீங்கள் முதலமைச்சரான பிறகு நான் உங்களுக்கு முதல் முறையாக எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை பற்றிய சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். மதுபானம் போல, அதிகாரமும் போதை தருகிறது. நீங்கள் அதிகாரத்தால் போதையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது” என்று எச்சரித்து இருந்தார்.

27 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. மகிழ்ச்சியான பாஜக ஆதரவாளர்கள் கட்சியின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே கூடி, மேள தாளங்கள், பட்டாசுகள் மற்றும் காவி நிறப் பொடிகளுடன் கொண்டாடினர்.2015 ஆம் ஆண்டு 70 இடங்களில் 67 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்ற டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பிடி இப்போது சரிந்து வருவதாகத் தெரிகிறது.

MUST READ