Homeசெய்திகள்அரசியல்இசைவாணி... நீ தாடிக்காரன் பேத்தி என்றால் உங்க ஆத்தா வழியா? அப்பன் வழியா?-...

இசைவாணி… நீ தாடிக்காரன் பேத்தி என்றால் உங்க ஆத்தா வழியா? அப்பன் வழியா?- ஏர்போர்ட் மூர்த்தி

-

- Advertisement -

“I am sorry ஐயப்பா”… நான் உள்ள வந்தா என்னப்பா? என கானா பாடகி இசைவாணி பாடிய பாடலால் இந்துக்களின் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. அவர் மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

இந்த விவகாரம் பற்றி எரிய இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழுவில் இசைவாணி உள்ளதுதான். பிக்பாஸ் போட்டியாளராக இருந்துள்ள இசைவாணி ‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி” என்ற பாடலில் தாடிக்காரன் பேத்தி என்கிற வார்த்தைகளை அவர் கையாண்டு இருந்தது இன்னும் உக்கிரத்தை தூண்டி விட்டது.

ஐயப்பன் சுவாமி கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை உள்ளது. அதனை மீறி உள்ளே வந்தால் என்ன நடக்கும்? எங்களை அடக்கி வைக்க இது பழைய காலம் இல்லை. ஏனென்றால் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் பேத்தி என்ற வகையில் அந்த பாடல் பொருள் தருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவருக்கு ஆதரவாக, ‘‘சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல். இசைவாணி ஒரு இந்து பெண்மணி அவருடைய அப்பாவின் பெயர் சிவக்குமார். இந்த பாடல் வந்து 5 வருடம் ஆகி விட்டது’’ என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இசைவாணிக்கு கசையடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர், ‘‘நான் தாடிக்காரன் பேத்தி என்றால் நீ உங்க ஆத்தா வழியா? உங்க அப்பன் வழியா? முதலில் இசைவாணி மீது இந்த சமூகத்தில் ஒரு பார்வை இருக்கிறது. எங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை கனீரென்று பாடுகிற பாடகி என்கிறார்கள். உன்னை பாடகி… எங்கள் சமூகத்துன் பெண்மணி என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், நீ… எங்கிருந்தோ வந்த ஒரு தமிழரல்லாதவரின் பேத்தி. வருடத்தில் 320 நாட்கள் அப்படி இப்படி இருந்து விட்டு ஒரு 40 நாட்கள் ரொம்ப கண்ணியமாக இருப்பார்கள். அதை வந்து வீட்டுல வைத்து விட்டு போய்விடுவார் என்றெல்லாம் இல்லை.

சினிமா நடிகை என்று சொன்னால் இங்கு ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் இல்லையா? எங்க திருமாவளவன் கூட சினிமா நடிகைகள் அவிழ்த்துப்போட்டு ஆடுபவர்கள் என்று சொல்லி இருக்கிறார். அப்போ அவர்களும் உன்னை அனுபவித்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். உண்மையிலேயே எல்லா வகுப்பை சார்ந்த பெண்களயும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றிருக்கிறது.

அங்கு பெண்களை அழைத்துச் செல்வதுதான் உங்கள் நோக்கமா? அப்படியென்றால் தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோயில்களில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்கள் போக முடியவில்லை. பூட்டு போட்டு இருக்கிறார்கள். இசைவாணி போன்றவர்களின் நோக்கம் ஒரு பிரச்னைக்கு முடிவு காண்பது என்கிற எண்ணம் இல்லை. மாறாக அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணக்கூடாது என்பது தான் இவர்களது அடிப்படை நோக்கம்.

இந்த ஐயப்பன் விவகாரத்தில் எஸ்.சி பெண்களை மட்டும்தான் உள்ளே விடவில்லயா? எல்லாபெண்களையும்தானே உள்ளே விடவில்லை. நீங்கள் மட்டும்தான் புரட்சிகரமானவர்களா? ஏன் மற்ற சாதிப்பெண்கள் பேசவில்லை? காசுக்கு பாடுவது என்றால் சும்மா ரோட்டில் துண்டை விரித்து பாடுவதென்றாலும் காசு வரும். எதுக்கு இந்த மாதிரி பிரச்னயை தூண்டி விட்டு சம்பாதிக்க வேண்டும்? வயிறு வளர்க்கணும்? சரி நீங்க உங்களை ஒரு புரட்சியாளர் என்றே காட்டிக்கொள்ளுங்கள். அதற்காக மற்றவர்கள் உணர்வில் விளயாடீதீர்கள்’என வன்மையாக கண்டித்துள்ளார் ஏர்போர்ட் மூர்த்தி.

MUST READ