டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு – ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.
![டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/G-20-4-300x169.webp)
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான்,
பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பல்வேறு அறிவுரைகளை பெற்றுள்ளேன் குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஜனவரி 8-10 வரை நடைபெறவுள்ள, பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, இதில் பங்கேற்க 80 நாடுகளை சேர்ந்தவர்கள் வரவுள்ள நிலையில் அவர்களை வரவேற்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதேபோல் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் 34 நாடுகளை சேர்ந்த முதலீட்டார்கள் பங்கேற்க உள்ளனர்.
![மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான்](https://apcnewstamil.com/wp-content/uploads/2022/12/ShivrajSinghChouhan-300x200.webp)
அவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவை தவிர, நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு, மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையம் பணிகளை மேற்கொள்ள அடிக்கல் நாட்டவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.