கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு எதிராகவும் அவரது மனைவி உட்பட ஐந்து பேர் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முதலில் இந்த வழக்கு விழுப்புரத்தில் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது. 20 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி இந்த வழக்கிலிருந்து அனைவரையும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தாமாக முன்வந்து வழக்கினை விசாரித்தார். இந்த வழக்கு மிக மோசமாக கையாளப்பட்டிருக்கிறது. வழக்கினை ஒரு நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றிய போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கடுமையாக சாடிய நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 11.3.2024 அன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/minister-high-court-judgement-today/57713
மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன்பாக ஒரு மாதத்திற்குள் அணுகி ஜாமீன் பெறலாம் என்றும் அதுவரை சரணடைவதற்கு வழங்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
ஜாமீன் பெற கொடுத்த கால அவகாசத்தை நீட்டிக்க பொன்முடி தரப்பில் கோரிக்கை வைத்த நிலையில் 2 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் இது தொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.