Homeசெய்திகள்அரசியல்அழிவின் விளிம்பில் ந.த.க: சீமானுக்கு எதிராக தம்பிகள் தொடங்கிய புதிய அமைப்பு

அழிவின் விளிம்பில் ந.த.க: சீமானுக்கு எதிராக தம்பிகள் தொடங்கிய புதிய அமைப்பு

-

- Advertisement -

நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லை’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியிருக்கிறார்.

மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் தனது மேடை பேச்சில் ஜாதி ரீதியாக பேசி வருவதாக குற்றச்சாட்டை வைத்ததற்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படிதாண்டா, நீ, வா, போ எனவும், ஜாதியை குறிப்பிட்டு ஒருமையிலும் பேசினார்.
இதனையடுத்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். தொடர்ந்து, நெல்லை ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, “கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்” என்று தெரிவித்தார்.

“கடின உழைப்பாளிகளை ஒரே இரவில் தூக்கி எறியும் ஒரு கெட்ட பழக்கம் சீமானிடம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியில் அயராது உழைத்தவர் பார்வின். சீமான் நடந்து கொண்ட விதம் சர்வாதிகாரம் மிக்கது’’ என நெல்லை நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மருத்துவர் இளவஞ்சி சமீபத்தில் விலகினார். கடந்த 8ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகளுடன் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகினார். இதுபற்றி நிருபர்களிடம் சீமான் பற்றி சரமாரியாக குற்றம்சாட்டினார். இதை அக்கட்சி நிர்வாகி ஒருவர் எதிர்த்து பேசவே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியால் தாக்கி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட நாதக செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், ‘தன்னிச்சையாக செயல்படுகிறார். யாரையும் மதிப்பதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கட்சியில் இருந்தா இரு… இல்லைன்னா போ’ என்று கூறுவதாக அவரது மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறி சமீப காலமாக விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் பல அணிகளின் மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். சென்னையில் விலகிய சில நிர்வாகிகள் அவருக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.

MUST READ