Homeசெய்திகள்அரசியல்ஆட்சியில் பங்கு என்பது இல்லை: திருமாவிற்கு திமுக கொடுத்த பதிலடி

ஆட்சியில் பங்கு என்பது இல்லை: திருமாவிற்கு திமுக கொடுத்த பதிலடி

-

- Advertisement -

ஆட்சியில் பங்கு என்பது இல்லை: திருமாவிற்கு திமுக கொடுத்த பதிலடி

ஆட்சியில் பங்கு, எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பது விடுதலை சிறுத்தைகளின் கொள்கை முழக்கம். அந்த முழக்கத்தை தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் ஆதவ் அர்ஜூன் பேசி வருவதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், நம்மோடு கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதை ஆதவ் அர்ஜூன் வரவேற்று பதிவு செய்திருந்தார். மேலும் 2026 தேர்தல் வருவதற்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும்போது , இப்போது தேவையற்ற விவாதங்களை விசிக தொடர்ந்து முன் வைத்து வருகிறது. இது திமுக கூட்டணிக்குள் பெரும் பிரச்சனையாக மாறியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம், அந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவிற்கு பெரும் பங்கு இருக்கிறது என்று தொடர்ந்து பேசியும், அறிக்கை வாயிலாகவும் கூறி வருகிறார். ஆனால் மற்றொரு பக்கம் ஆதவ் அர்ஜூன் நீங்கள் மட்டும் தான் ஆளனுமா? நாங்கள் ஆளக்கூடாதா? என்று தேவையற்ற கேள்விகளை எழுப்பி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இதை திமுக துணை செயலாளர் ஆ.ராசாவும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர்களில் ஒருவர் ஐ.பெரியசாமி, நாங்கள் ஆட்சியில் பங்கு எல்லாம் கொடுக்க மாட்டோம். 1967ல் இருந்து திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. எப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கொடுத்து பழக்கம் இல்லை. கூட்டணியில் சீட்டுகள் கூடவோ, குறைவாகவோ பேசி கொடுப்போம். அவ்வளவுதான் ஆட்சியில் பங்கு எல்லாம் கொடுக்க மாட்டோம் என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

விமர்சனம் இல்லை என்றால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும்…. இயக்குனர் சீனு ராமசாமி பேச்சு!

MUST READ