ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து பாமக பொருளாளராக திலகபாமா அப்பதவியில் தொடர்வார் என பாமக தலைவர் அன்புமணி அதிரடியாக அறிவித்துள்ளாா்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அன்புமணி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்ற திலகபாமாவை பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சையது மன்சூர் உசேனை பொருளாளராக ராமதாஸ் நியமித்துள்ளாா்.
மேலும், ராமதாஸின் அறிவிப்பை தொடர்ந்து, பொதுக்குழுவால் பாமக பொருளாளராக முறைபடி தேர்ந்தெடுக்கப்ட்ட திலகபாமாவே அப்பொறுப்பில் தொடர்வார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளாா்.
ராமதாஸின் கடுமையான விமர்சனங்கள்-நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை