Homeசெய்திகள்அரசியல்ராமதாஸின் கடுமையான விமர்சனங்கள்-நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

ராமதாஸின் கடுமையான விமர்சனங்கள்-நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

-

- Advertisement -

ராமதாஸின் கடுமையான விமர்சனங்களுக்கு பின் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறாா்.பாமகவில் என்ன நடக்கிறது? அன்புமணி வசம் செல்கிறதா பாமக?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், அன்புமணியின் தலைமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கினார் ராமதாஸ், அவரது செயல்பாடுகளால் மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்திருந்தாா். தந்தை, மகன் இடையிலான மோதல் முடிவுக்கு வரும் எதிர்பார்க்கபட்டிருந்த  நிலையில் நாளுக்கு நாள் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாா். அதாவது அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டாா்.

எனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகந்தனுக்கு பதவி அளித்தேன். முகந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்த போது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசினாா். அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, என் தலையில் வீசியதற்கு சமம். அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் உள்ளது. அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்த கொண்டபோதே நான் செத்து போய்விட்டேன் என வேதனையுடன் ராமதாஸ் கூறியிருந்தார்.

இதனையடுத்து, ராமதாஸின் கடுமையான விமர்சனங்களுக்கு பின் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறாா். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் என்றும், 2026 தேர்தல் கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணியின் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு 23 மாவட்டச் செயளார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 22 பேர் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்ற தாயின் மீது பாட்டில் வீசிய அன்புமணி! உடைந்து பேசிய ராமதாஸ்!

MUST READ