
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 60வது லீக் போட்டி, நேற்று (மே 14) பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, கேப்டன் டூ பிளசிஸ் 55 ரன்களையும், மேக்ஸ்வெல் 54 ரன்களையும் எடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில், சம்பா மற்றும் கேஎம் ஆசிப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 172 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை அடைந்தது.
முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.