Homeசெய்திகள்விளையாட்டுஅனல் பறக்கும் ஆட்டம் - 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாvsபாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

அனல் பறக்கும் ஆட்டம் – 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாvsபாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியாvsபாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது பாபர் அசாம் தலையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதும் ஆட்டமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவரில் கோட்டைவிட்டது. குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியிடம் முதலாவது வெற்றியை பெறும் நோக்கத்துடன் மோதவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ