spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!

-

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஜிம்பாவே அணி முதலாவது பேட்டிங்கில் 152 ரன்கள் எடுத்துள்ளது.

we-r-hiring

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் அனைத்து போட்டிகளும் ஜிம்பாவேவில் உள்ள ஹராரேவில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் 4வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த ஜிம்பாவே அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம் இந்திய அணியானது இப்போட்டியில் வெற்றி பெற்று தொடர கைப்பற்ற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஜிம்பாவே அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வெஸ்லே மாதவெரெ 25 ரன்களிலும், மருமானி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் எடுத்தது. பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

MUST READ