spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சு - இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி!

ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சு – இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி!

-

- Advertisement -

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 47 வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற’சூப்பர் 8’ சுற்றில் 43வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் ஆப்கானிஸ்தான் அணியானது ரஷித் கான் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 8 ரன்களிலும் விராட் கோலி 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 20 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 181 ரன்கள் எடுத்தது.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும் ஹசரத்துல்லா சசாய் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

 

 

 

MUST READ