spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு”சூப்பர் 8” சுற்று - வங்காளதேசம் அணியை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி!

”சூப்பர் 8” சுற்று – வங்காளதேசம் அணியை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி!

-

- Advertisement -

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெறும் ’சூப்பர் 8’ சுற்றில் 47வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் வங்காளதேசம் அணியானது நஜ்மூல் ஹசன் சாண்டோ தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணியின் கேப்டன் நஜ்மூல் ஹசன் சாண்டோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 23 ரன்களிலும் விராட் கோலி 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 36 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் எடுத்தது.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேசம் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் 13 ரன்களிலும் தன்சிட் ஹசன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நஜ்மூல் ஹசன் சாண்டோ 40 ரன்களிலும் டவுகிட் கிரிடோய் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அணியின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

MUST READ