Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் ரோகித் சர்மா, சுப்மான் கில் அபார சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் ரோகித் சர்மா, சுப்மான் கில் அபார சதம்

-

 

இங்கிலாந்து 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நேற்று தொடங்கியது.

 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியானது இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் விளாசி அவுட் ஆகினர். தற்போது வரை இந்திய அணி 280 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

 

MUST READ