Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!

பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!

-

 

பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய லக்னோ அணி தனது முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

அதிரடியாக விளையாடிய டி காக் 54 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் எடுத்தனர். அதேபோல், பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவுச் செய்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர்தவான் 70 ரன்களை குவித்தார். லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோசின் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

MUST READ