பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 65வது லீக் போட்டி நடைபெற்றது. கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 65வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பந்துவீசவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் ரன்களிலும் டாம் கோலர் கேட்மோர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்களிலும் ரியான் பராக் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பஞ்சாப் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.