Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!

-

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 65வது லீக் போட்டி நடைபெறுகிறது. கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 65வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில 2வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 11 முறையும் ராஜஸ்தான் அணி 15முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால் இப்போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே சமயம் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்விடைந்துள்ள ராஜஸ்தான அணி இப்போட்டியில் எழுச்சி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் கடந்த 27வது லீக் போட்டியில் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பந்துவீசவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்வி ஜெய்ஸ்வாலும் டாம் கோலர் கேட்மோரும் களமிறங்கவுள்ளனர்.

 

MUST READ