Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 27வது லீக் போட்டி நடைபெற்றது. முலான்பூரில் உள்ள மகராஜா யாவிந்திரா சிங் இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 27வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டியில் 2 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 11 வெற்றியை பெற்றுள்ளதுு ராஜஸ்தான் அணி 15 வெற்றியை பெற்றுள்ளது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணியானது இந்த போட்டியில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டிக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

 

MUST READ