Homeசெய்திகள்விளையாட்டு17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி!

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி இந்த ஆண்டுக்கான முதல் சதத்தை பதிவு செய்தார்.

இன்று நடைபெற்ற 19வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 12 வெற்றியும் பெங்களூரு அணி 15 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 67 பந்துகளில் சதம் விளாசினார். 17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

MUST READ