Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்

-

- Advertisement -

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவர்களிடம் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மேலும் அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாவிடில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டம், ஆகஸ்ட் மாதம் வரை அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ