spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..

இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..

-

- Advertisement -
இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..
ராமேஸ்வரம் மீனவர்களின் 3 விசைப்படகுகள் மற்றும் 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டுப்பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை சிறை பிடித்துள்ளனர்.

இலங்கை கடற்படை அட்டூழியம் : 33 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு..

we-r-hiring

அதன்படி 3 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 33 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தகவலறிந்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ