spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி

இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி

-

- Advertisement -

துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி மூச்சு திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

we-r-hiring

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சளி, இருமல் அதிகமாக இருந்ததாகவும் கூறி கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி சளிக்காக ஆவி (நெபுலேசர்) பிடித்துள்ளார். மேலும் அங்கிருந்து மருந்து மாத்திரைகளும் பெற்றோர்கள்
வாங்கி சென்றுள்னர்.

இந்நிலையில் நள்ளிரவில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி மாணவியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ