spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?

-

- Advertisement -

ன்

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இப்படி ஐந்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் ஐந்து பேருமே இளவயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

எப்

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்கிறார்.

MUST READ