- Advertisement -
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 காவல் உயரதிகாரிகளை
பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே டி.ஜி.பி-யாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த ராஜிவ் குமார், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை ஆணைய ஐ.ஜி.யாக மல்லிகாவும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்பின் ஐ.ஜி.யாக அபிஷேக் தீக்ஷித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி எஸ்.பி.யாக
முத்தமிழ் நியமிக்கப்பட்டுள்ளார்.