spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லையா !

+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லையா !

-

- Advertisement -

+2 தேர்வு இவ்வளவு பேர் எழுதவில்லை!

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச்  13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் +2 தேர்வு எழுதும் மாணவர்களில் 50,674  மாணவர்கள் ஆப்ஸன்ட் ஆனதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்களும் , 4,33,436 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதே போன்று  புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 6,982 மாணவர்களும் 7,728 மாணவிகளும் என மொத்தம் 14,710 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

we-r-hiring

அதில் தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 185 பள்ளிகள் தேர்வு மையங்களாகவும், தனித் தேர்வர்களுக்காக 131 தேர்வு மையமும் மற்றும்  சிறை ககைதிகளுக்கான  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

plus two exam

அனைத்து மையங்களுக்கும் தேவையான வினாத்தாள்கள், மாணவர்களின் விவரங்களை நிரப்ப வேண்டிய மேல்தாள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் போது குடிநீர், தடையில்லா மின் இணைப்பு ஆகியவை உறுதிசெய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தும் வகையில் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 50,674  மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு மையங்களில் வராதோர் விவரங்களை சரிபார்க்க தேர்வு மையங்களில் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மொழித் தாளுக்கு அதிக அளவில் வராதது துறைகள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் வராததற்கான காரணம் குறித்து அந்தந்த பள்ளிகளிடம் கல்வி வாரியம் தகவல் கேட்டுள்ளது.

இவ்வாரு ராமநாதபுரத்தில் மொழித்தாளுக்கு 889 மாணவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சில தேர்வு மையங்களைச் சுற்றிச் சென்று தேர்வுக்கான கல்வித் துறையின் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

ஜானி டாம் வர்கீஸ்,பிளஸ் டூ,plus two , Johny Tom varghese

தேர்வெழுத மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, வராதோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வராததற்கான காரணங்களை கேட்டறிந்து, பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிக்கன்குனியா என சந்தேகிக்கப்படும் நிலையிலும் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். அவருக்கு தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவகங்கை தாலுகாவில் உள்ள மன்னார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். திங்கள்கிழமை நடைபெற்ற மொழித் தாளுக்கு 16,532 மாணவர்களில், 914 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 75 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுவதற்கு உதவியாக 56 பேர் சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Jeevana ,Collector

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  2,831 மாணவர்கள் வரவில்லை.1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

அடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 15.03.2023 அன்று ஆங்கிலத் தேர்வு நடைபெறும்.

தேர்வுத்தாள் திருத்தம் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடை பெரும். 48,000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.

MUST READ