spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

வரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

-

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.வரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அதிமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. பூத் கமிட்டி தொடர்பாக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த அறிக்கையை தலைமைக் கழகத்தில் தாக்கல் செய்யுமாறு ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், வருகின்ற இருபதாம் தேதிக்குள் அனைவரும் பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 25 மற்றும் 26 ஆம் தேதி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூத் கமிட்டி தொடர்பாக இதுவே கடைசி கூட்டமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இளம்பெண் கோரிக்கை…

we-r-hiring

MUST READ